ஜெயந்தி நடராஜன் தாயாருக்கு கருணாநிதி அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனின் தாயாரும்,முன்னாள் முதல்வர்பக்தவச்சலத்தின் மகளுமான ருக்மணி சுந்தரராஜன் சென்னையில் காலமானார்.அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதிஅஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்தின் இளைய மகள் ருக்மணி சுந்தரராஜன்.இவரது மகள் ஜெயந்திநடராஜன். உடல் நலக்குறைவு காரணமாக ருக்மணி நேற்று முன்தினம் இரவுசென்னையில் காலமானார். அவரது வயது 74.

அவரது மறைவுச் செய்தியை அறிந்ததும் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள்ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி ஆகியோர்ஜெயந்தி நடராஜன் வீட்டுக்குச் சென்று அவரிடம் துக்கம் விசாரித்தனர். ருக்மணியின்உடலுக்கு மாலை அணிவித்து கருணாநிதிஅஞ்சலி செலுத்தினார்.

இதேபோல காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்,சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும்ருக்மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் ஜெயந்தியிடம் துக்கம்விசாரித்தார். நேற்று மாலை ருக்மணியின் உடல் மயிலாப்பூரில் உள்ள சுடுகாட்டில்தகனம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+