கோவை குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த முக்கியகுற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அல் உம்மா தலைவர் பாஷா, கேரள அரசியல் தலைவர்அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 181 பேர் மீது போலீஸார் குற்றம் சாட்டினர். இவர்களில் 167 பேர் கைதுசெய்யப்பட்டனர். 9 பேர் இயற்கையான முறையில் மரணம் அடைந்தனர்.
ஜிபுர் ரஹ்மான், டெய்லர் ராஜா உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் டெய்லர்ராஜாவை இன்று போலீஸார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ராஜா பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று ராஜாவை மடக்கிப் பிடித்தனர்.












Click it and Unblock the Notifications