தமிழகம் 50: கருணாநிதி தலைமையில் விழா

Subscribe to Oneindia Tamil

சென்னை:தனித் தமிழ்நாடு உருவாகி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னையில் விழாவுக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொழி வாரி அடிப்படையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. அப்படிப்பிரிக்கப்பட்டு உருவான மாநிலங்கள்தான் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் போன்றவை. சென்னை மாகாணமாகஇருந்த அன்றைய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை பிரித்து இந்த மாநிலங்கள் உருவாகின.

தனி மாநிலம் உருவான நாளை கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் ஆண்டுதோறும் படுவிமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் தனித் தமிழகம் உருவான நாளை தமிழகத்தில் கொண்டாடுவதுகிடையாது.

தனித் தமிழகம் அமைந்ததன் பொன் விழாவை அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என்று பல்வேறுதரப்பினரும் கோகி வந்தனர். இந்த நிலையில் தனித் தமிழ் மாநிலம் அமைந்ததன் பொன் விழாவை கொண்டாடதமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மாநிலம் அமைந்த 50ம் ஆண்டு பொன்விழாவினை தமிழக அரசின் சார்பாக வரும் நவம்பர் 1ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சிறப்பாககொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பர்னாலா தலைமையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் விழா நடைபெறுகிறது. இதில்அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+