ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை: கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

மதுரை:தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் நினைக்கிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லைஎன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் தேர்தலில் ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்ற தகவலை சேகரித்துவருகிறோம். சில இடங்களில் தவறு நடந்துள்ளதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. கூட்டணி தர்மத்தைமீறி யாரும் நடக்கக் கூடாது என்று சில நாட்களுக்கு முன்புதான் கருணாநிதி எச்சரித்திருந்தார்.

ஆனால் சில திமுகவினர் துரோகம் செய்துள்ளனர். ஈரோடு, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில்காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுகவினர் கைப்பற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.வருந்தத்தக்கது.

இந்தப் பிரச்சினைக்கு முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துபார்க்கவுள்ளோம். தேர்தலில் வன்முறை சாதாரணமானது தான், ஆனால் காங்கிரஸ் இடங்களை திமுக பிடித்ததுதுரதிர்ஷ்டவசமானது.

தமிழக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியும் பங்கு பெற வேண்டும் என காங்கிரஸார் நினைக்கிறார்கள். அந்தநினைப்பை தவறு என்று சொல்ல முடியாது, தவறும் கிடையாது. இதுகுறித்து கட்சி மேலிடத்திடம்சொல்லியுள்ளோம். இதுகுறித்து முதல்வர் கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் முடிவு செய்வார்கள்என்றார் கிருஷ்ணசாமி.

உள்ளாட்சித் தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றிய அதிருப்தியில் காங்கிரஸார் உள்ள நிலையில்,அமைச்சரவையில் பங்கு கேட்பதில் தவறில்லை என்று கிருஷ்ணசாமி அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+