ஏ.சி. காஸ் கசிவு: காரில் சென்ற 3 பேர் பலி
சென்னை:கார் ஏ.சி. இயந்திரத்திலிருந்து காஸ் கசிவு ஏற்பட்டு அதனால் காரில் பயணித்த 3 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் சனிக்கிழமை இரவு விடிய விடிய பேய் மழை பெய்தது. இதனால்நகரமே அல்லோகல்லப்பட்டுப் போனது. அன்று இரவு சென்னையில் மொத்தம் 8 பேர்மழை காரணமாக இறந்தனர்.
இந்த நிலையில் தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் ஒரு கார் சாலையோரம்நின்றிருந்தது. காருக்குள் இருந்த 3 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.அவர்கள் கார் மீது மின்சார வயர் விழுந்து இறந்திருக்கலாம் என முதலில்கருதப்பட்டது.
ஆனால் கார் ஏ.சி. இயந்திரத்திலிருந்து காஸ் கசிந்ததால் தான் 3 பேரும் இறந்ததுதற்போது தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் ஒருவரது பெயர் பாலகிருஷ்ணன்.இவர் மதுரையைச் சேர்ந்தவர். சென்னை தி.நகரில் சால்ஜர் டெக்னாலஜிஸ் என்றகம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இன்னொருவர் பாலச்சந்தர். இவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் என்ஜீனியர். மற்றொருவர்பெயர் ஆறுமுகம். அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர்.
சனிக்கிழமை மாலை தனது அலுவலக கம்ப்யூட்டரில் பழுது ஏற்பட்டதால்பாலச்சந்தரை வரவழைத்து சரி செய்து கொண்டிருந்தார் பாலகிருஷ்ணன். இப்பணிமுடிய இரவு 11 ஆகி விட்டது. அப்போது கன மழை பெய்து கொண்டிருநத்து.இதையடுத்து 3 பேரும் ஹோட்டலில் சாப்பிடச் சென்றனர்.
ஜி.என்.செட்டி சாலையில் சென்றபோது கார் பழுதாகி விட்டது. இதையடுத்து அதைசரி செய்து கொண்டிருந்தனர். அப்போது பாலகிருஷ்ணன் தனது செல்போன் மூலம்சகோதரியின் மகன் தீபக்கிற்கு போன் செய்து நடந்ததைக் கூறி மழை நின்றவுடன்வருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து போன் வரவில்லை.
இந்த நிலையில்தான் ஏ.சி. இயந்திரத்திலிருந்து காஸ்கசிந்து 3 பேரும்காருக்குள்ளேயே பிணமாகி விட்டனர். நேற்று காலை வரை பாலகிருஷ்ணன்வராததால், ஜி.என்.செட்டி சாலைக்கு வந்து பார்த்துள்ளார் தீபக். அப்போது கார் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த அவர் காருக்குள் மூன்று பேரும் அசைவில்லாமல்இருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்றார்.
பின்னர் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து காரின்கண்ணாடியை உடைத்து 3 பேரையும் மீட்டனர். அப்போதுதான் மூன்று பேரும்இறந்தது தெரிய வந்தது.