டெல்லி: வணிகர்கள் மீது போலீஸ் தடியடி
டெல்லி:இன்று முதல் 3 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டத்தில் குதித்துள்ள வணிகர்கள் சட்டசபையைமுற்றுகையிட்டதால் அவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார்கலைத்தனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் குடியிருப்புப் பகுதிகளில் கடைகளை நடத்தவும், வியாபாரம் மேற்கொள்ளவும் டெல்லி மாநில அரசுதடை விதித்துள்ளது. அப்படி வைக்கப்பட்டுள்ள கடைகளை மூடி சீல் வைக்கும் நடவடிக்கையில் சமீபத்தில்இறங்கியது.
டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். டெல்லிஅரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வருகிற புதன்கிழமை வரை இடைக்காலத் தடை விதித்தது.வியாழக்கிழமை முதல் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது. இதற்குவணிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்தவணிகர்கள் முடிவு செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும்ஆதரவு தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று காலை முதல் வணிகர்களின் போராட்டம் தொடங்கியது. டெல்லி நகரில் உள்ளஅனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றன. இதனால் நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இன்று காலை வணிகர்கள் பெரும் கூட்டமாக திரண்டு சட்டசபை வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில்குதித்தனர். இன்று சட்டசபைக் கூட்டம் நடக்கும் நிலையில் வணிகர்கள் முற்றுகைப் போராட்டத்தில் குதித்ததால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு வணிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அப்படியும் அவர்கள்கலைந்து செல்லாததால் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி வணிகர்களை போலீஸார் கலைத்தனர்.
வணிகர்கள் போராட்டம் காரணமாக டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications