31 ஊராட்சிகளின் தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகம் முழுவதும் 31 ஊராட்சி அமைப்புகளின் தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்குடிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் சந்திரசேகரன் பேசுகையில், சில ஊராட்சிகளில் தலைவரைத்தேர்ந்தெடுப்பதற்கு போதிய ஆதரவு இல்லாத நிலை காணப்படுகிறது. சில இடங்களில் நிர்வாக பிரச்சினைகள்காரணமாக தேர்தலை நடத்த முடியாத நிலை.

மொத்தமாக 31 ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கு தேர்தலை நடத்த முடியாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.டிசம்பர் மாதத்திற்குள் இங்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ள ஊராட்சி இடங்கள்:

பஞ்சாயத்து ஒன்றியங்கள்: ஆணடிப்பட்டி, மதுரை கிழக்கு , சேலம், மொடக்குறிச்சி, தாளவாடி, முதுகுளத்தூர்,முத்துப்பேட்டை, நல்லம்பள்ளி, பள்ளிப்பட்டு, புழல், சாக்கோட்டை.

நகராட்சி: சிவகங்கை, வேலம்பாளையம்.

பேரூராட்சி: தென்கரை, பாலசமுத்திரம், பலபள்ளம், அரசிரமணி, அயோத்தியாபட்டனம், ஏத்தாப்பூர்,கொளத்தூர், மேச்சேரி, பனைமரத்துப்பட்டி, தாரமங்கலம், தேவூர், கூத்தாப்பூர், குற்றாலம், மீஞ்சூர்,காவேரிப்பாக்கம்.

மதுரை மாநகராட்சியின் 29வது வார்டில் வேட்பாளர் மரணம் காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை.இதேபோல சிவகங்கை நகராட்சியில் வார்டு எண் 9, கொடுமுடி பேரூராட்சியில் 9வது வார்டு ஆகியவற்றிலும்வேட்பாளர் மரணம் காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை.

இதேபோல, 561 பேரூராட்சிகளில் உள்ள 8807 வார்டுகளில் 26 வார்டுகளிலும், மேல்விஷாரம் நகராட்சியின்நான்கு வார்டுகளிலும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அங்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

அடுத்த உள்ளாட்சித் தேர்தலின்போது 6 மாநகராட்சிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்பயன்படுத்தப்படும் என்றார் சந்திரசேகரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+