நைஜீரிய விமானம் விழுந்து 100 பேர் பலி
அபுஜா:நைஜீரியாவில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 100 பேர் பலியாயினர்.
நைஜீரிய நாட்டுத் தலைநகர் அபுஜாவிலிருந்து ஒரு விமானம் 105 பேருடன் செகோடா என்ற நகருக்குபுறப்பட்டது. ரன்வேயிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அருகில் உள்ள ஒரு வயலில் விமானம் பயங்கரசப்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் 100 பேர் பலியாயினர். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். வயல் வெளியெங்கும்இறந்த உடல்கள் சிதறிக் கிடந்தன. அவற்றை லாரிகளில் வைத்து அள்ளி எடுத்துச் சென்றனர்.
இந்த விபத்தில் நைஜீரிய நாட்டு முஸ்லீம் சதாயத்தினரின் தலைவரான சுல்தான் இப்ராஹிம் முகம்மதுமசிடோவும் பலியாகி விட்டார். நைஜீரியாவில் 7 லட்சம் முஸ்லீம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரிய வரவில்லை. இதுகுறித்து விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications