பழனிச்சாமி பதவியேற்பு: கூட்டணியினர் புறக்கணிப்பு
சென்னை:தமிழக அமைச்சரவையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட பொங்கலூர் பழனிச்சாமி நேற்றுமாலை நடந்த எளிய நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில்கலந்து கொள்ளாமல் திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.
தமிழக ஊரக தொழில்துறை அமைச்சராக பொங்கலூர் பழனிச்சாமியை நியமிப்பதாக,முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் சமீபத்தில் அறிவித்தார்.இதைத் தொடர்ந்து நேற்று மாலை பொங்கலூர் பழனிச்சாமி பதவியேற்றுக்கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் ஆளுநர் பர்னாலா பழனிச்சாமிக்குபதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது என்றும், ஆனால் கலந்துகொள்ளாமல் அவர்கள் புறக்கணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஊராட்சித் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல தலைவர்பதவிகளை உடன்பாட்டை மீறி திமுகவினர் கைப்பற்றியதால் கூட்டணியில் உள்ளகட்சிகள் அனைத்தும் அதிருப்தியுடன் உள்ளனர். பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் கூட்டணியினர் பங்கேற்காததுகுறிப்பிடத்தக்கது.