For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக;இனி பாமக எதிர்க்கட்சி-ராமதாஸ் அதிரடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:உள்ளாட்சித் தேர்தலில் திமுக பச்சைத் துரோகம் செய்து விட்டது. இனிமேல் பாமக பொறுப்புள்ளஎதிர்க்கட்சியாக செயல்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலானவற்றைதிமுக போட்டி வேட்பாளர்கள் கைப்பற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இதனால் பாமக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கடும் அதிருப்தி அடைந்தன. குறிப்பாக பாமகநிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை விட்டார்.

இந்த அறிக்கைக்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராமதாஸுக்குவிளக்கம் அளித்து விரிவாக கூறியிருந்தார். இந்த அறிக்கையில் திமுகவினர் மட்டும் துரோகம் செய்யவில்லை,பாமகவினரும் சில இடங்களில் கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டதாககூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்தார். அப்போது முதல்வர்கருணாநிதியை கடுமையாக விமர்சித்து ராமதாஸ் பேட்டி அளித்தார்.

ராமதாஸ் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் பாமக வேட்பாளர்கள் பல இடங்களில்தோற்கடிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி தர்மத்தை திமுகவினர் கடைப்பிடிக்கவே இல்லை.

இதை நாங்கள் சுட்டிக் காட்டி அறிக்கை வெளியிட்டால், நான்கு சுவர்களுக்குள் நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது என்கிறார் கலைஞர். வெளியில் சொல்லாவிட்டால் எங்கே போய்ச் சொல்வது?

இத்தனை தவறுகள் நடந்துள்ளன என்று நாங்கள் கூறியபோதிலும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல்,தவறுகளையெல்லாம் அவர்கள் செய்து விட்டு, பச்சை துரோகம் செய்து விட்டு, எங்கள் மீதே குற்றம் சாட்டுகிறார்கலைஞர். இதை வெளியில் வேறு சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்.

தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை திமுக அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் மதிக்கவே இல்லை.எங்களை இழிவுபடுத்தி விட்டனர்.

பாமகவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்கள் போட்டியிடப் போவதைமுன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட கருணாநிதி, அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை.

அதேபோல 6 மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவிகளை பாமகவுக்கு தருவதாக கூறியிருந்தார் கருணாநிதி.ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த உடன்பாட்டையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார்.

உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு அதிருப்தி உள்ளது உண்மைதான். ஆனால் திமுக ஆட்சிக்கு எங்களால்எந்தப் பாதகம் ஏற்படாது. இறுதி வரை திமுக ஆட்சிக்கு ஆதரவு தருவோம்.

பாமக இனிமேல் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும். இப்போது உள்ள அதிமுகவை பொறுப்பானஎதிர்க்கட்சி என்று கூற முடியாது. பாமக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இனிமேல் செயல்படும் என்றார்ராமதாஸ்.

திமுக மீதும் முதல்வர் கருணாநிதி மீதும் கடுமையாக குற்றம் சாட்டிப் பேசியுள்ள ராமதாஸ், இனிமேல் பாமகஎதிர்க்கட்சியாக செயல்படும் என்று ஆவேசமாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

பாமகவைப் போலவே அதிருப்தி அடைந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுபோல முடிவுகளை அறிவிக்குமாஎன்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X