நகராமல் நிற்கும் புயல் சின்னம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நகராமல் அப்படியே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தமிழக, ஆந்திர மாநிலப் பகுதியில், தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்தற்போது அந்த புயல் சின்னம் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications