இளம் விஞ்ஞானிகளை கெளரவிக்கும் கலாம்
சென்னை:கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள94வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டின்போது 13 இளம் விஞ்ஞானிகளைகெளரவித்து அவர்களுக்கு பரிசினை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.
இந்திய அறிவியல் காங்கிரஸ் அமைப்பின் 94வது மாநாடு சிதம்பரத்தில் அடுத்தஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தமாநாட்டில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
இம்மாநாட்டில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,அறிவியல் ஆய்வாளர்கள், அணு விஞ்ஞானிகள், இளம் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர்கலந்து கொள்கின்றனர்.
இந்திய அறிவியல் கழகம் தேர்வு செய்துள்ள 13 இளம் விஞ்ஞானிகள் இந்தவிழாவில் கெளரவிக்கப்படுகிறார்கள். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்அவர்களுக்கு தலா ரூ. 25,000 ரொக்கப் பரிசு, பாராட்டுப் பட்டயம் ஆகியவற்றைவழங்குகிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் அவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்கப்படுகிறது.