தேமுதிக கவுன்சிலர்களுடன் கேப்டன் ஆலோசனை
சென்னை:தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளின்கவுன்சிலர்களை சென்னைக்கு வருமாறு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்அழைத்துள்ளார்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் 600 கவுன்சிலர்கள் வரைதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் சென்னைக்கு வருமாறுவிஜயகாந்த் அழைத்துள்ளார்.
கேப்டன் அழைப்பை ஏற்று அனைவரும் 4ம் தேதி சென்னை வருகிறார்கள். அந்தந்தமாவட்ட தேமுதிக நிர்வாகிகளும் உடன் வருகிறார்கள். அன்று காலை 11 மணிக்குகோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கவுன்சிலர்களின் கூட்டம்நடக்கிறது. விஜயகாந்த் பேசுகிறார்.
அப்போது, எப்படி செயல்பட வேண்டும் என்று கவுன்சிலர்களுக்கு விஜயகாந்த்ஆலோசனையும், அறிவுரையும் வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு இடங்களில் வெற்றி பெற்ற பல சுயேச்சைகவுன்சிலர்கள் தேமுதிகவில் இணையும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.