அமைச்சர் தாசரி மீது மருமகள் பரபரப்பு புகார்
தெலுங்குப் படத் தயாரிப்பாளரான ராவ் இப்போது மத்திய அமைச்சராக உள்ளார். தமிழகத்திலும் இவருக்குஏகப்பட்ட முதலீடுகளும் தொழில்களும் உண்டு. இவரது மகன் தாசரி பிரபு. இவருக்கும் சுசீலா என்பவருக்கும்கடந்த 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. பிரபு-சசீலா தம்பதிக்கு 11 வயதில் தாசரி நாராயணன் என்ற மகன்உள்ளார்.
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த ஆண்டுதனது மாமனார் மற்றும் கணவர் மீது சுசீலா வரதட்சணைப் புகார் கொடுத்திருந்தார். இது போலீஸ் விசாரணையில்இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தன்னை ஒதுக்கி வைத்து விட்டு தனது கணவருக்கு 2வது கல்யாணம் செய்ய நாராயண ராவ்முயற்சிப்பதாக சுசீலா குற்றம சாட்டியுள்ளார். அவரையும், தனது கணவரையும் குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக ஹைதராபாத் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சுசீலா. தற்போது ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிஆட்சியில் இருப்பதாலும், மத்திய அமைச்சராக நாராயணராவ் இருப்பதாலும், போலீஸார் நீண்ட காத்திருப்புக்கப்பின்னர் சசீலாவிடமிருந்து புகாரைப் பெற்றுக் கொண்டனர். இருப்பினும் இன்னும் புகாரைப் பதிவு செய்யவில்லைஎன்று தெரிகிறது.