பெங்களூரில் கலந்த பாக் கிரிக்கெட் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு:பெங்களூருரில் நடந்த கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக வந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 38 பேர் நாடுதிரும்பாமல் இந்தியாவுக்குள்ளேயே பதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் தீவிரவாதிகளாகஇருக்கலாம் என்று கருதப்படுவதால் அவர்களைப் பிடிக்க தீவிர வேட்டை தொடங்கியுள்ளது.

சமீபத்தில் மைசூர் அருகே இரண்டு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை கர்நாடக போலீஸார் கடும் துப்பாக்கிச்சண்டைக்குப் பின்னர் பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2002ம் ஆண்டு பெங்களூருரில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்தகிரிக்கெட் போட்டியைப் பார்க்க ஏராளமான பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் பெங்களூரு வந்தனர். அவர்களில் 38பேர் நாடு திரும்பவில்லை என்று தெரிகிறது.

இவர்களில் 29 பேர் பெங்களூரு, 6 பேர் மைசூரு, 2 பேர் ஹூப்ளி, ஒருவர் மங்களூரு முகவரிகளையும்கொடுத்திருந்தனர். இந்த முகவரிகளில் கர்நாடக போலீஸார் சென்று விசாரணை நடந்தபோது அங்கு அவர்கள்தங்கியிருக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இவர்கள் தீவிரவாதிகளாக இருக்க்க கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து 38பேரையும் பிடிக்க தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+