3 நாட்கள் தீவில் தத்தளித்த 20 அகதிகள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே நடுக் கடலில் தீவில் இறக்கி விடப்பட்டு 3 நாட்களாக தத்தளித்துவந்த 20 இலங்கை அகதிகளை தமிழக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இலங்கையிலிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 20 அகதிகள்ராமேஸ்வரத்திற்கு படகு மூலம் வந்தனர். ஆனால் இவர்களை அழைத்து வந்தபடகோட்டி, ஆதாம் தீவு என்ற தீவில் இறக்கி விட்டுச் சென்று விட்டார்.
நடுக் கடலில் ஆளில்லாத அந்தத் தீவில் கடந்த 3 நாட்களாக 20 பேரும் பரிதவித்துவந்தனர். குடிக்கக் கூட தண்ணீர் இல்லாததால் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர்கள் இவர்களைப் பார்த்து அங்குசென்று அனைவரையும் தங்களது படகுகளில் ஏற்றி ராமேஸ்வரம் கொண்டு வந்தனர்.
பின்னர் அனைவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணைநடத்திய












Click it and Unblock the Notifications