அபுதாபி-வெளிநாட்டு ஊழியர்களுக்கு புது சலுகை
துபாய்:அபுதாபியில் வேலை பார்க்கும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள், தங்களது பெற்றோரை ஒரு ஆண்டுவரை தங்களுடனேயே தங்க வைத்துக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து அபுதாபி குடியேற்றத் துறை தலைவரான மேஜர் நசீர் அலி அவாதி அல் மென்ஹாலி கூறுகையில்,அபுதாபியில் மாதம் 4000 திராம்கள் அல்லது அதற்குக் குறைவான ஊதியம் வாங்கிப் பணியாற்றுவோர், தங்களதுகுடும்பத்தினரை ஒரு ஆண்டு வரை உடன் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான குடியேற்ற விசா வழங்கப்படும். இப்பணி ஏற்கனவே தொடங்கி விட்டது.அபுதாபி உள்துறை அமைச்சரச் மேஜர் ஜெனரல் ஷேக் சைப் பின் சயீத் அல் நஹேயன் உத்தரவின் பேரில் இந்தபுதிய சலுகை அளிக்கப்படுகிறது.
அபுதாபியில் வேலை பார்ப்போர் தங்களது பெற்றோர்களை உடன் வைத்துப் பார்த்துக் கொள்ள வசதியாக இந்தசலுகை அளிக்கப்படுகிறது.
பெற்றோர்களை தங்களுடன் தங்க வைத்துக் கொள்ள விரும்புவோர் இதற்காக குடியேற்றத் துறைக்கு, 5000திராம்கள் காப்புப் பணமாக கட்ட வேண்டும். அவர்களது பெற்றோர்கள் நாட்டை விட்டு செல்லும்போது இந்தப்பணம் மீண்டும் அவர்களிடமே திருப்பி வழங்கப்பட்டு விடும் என்றார்.
இதற்கு முன்பு 3000 திராம்கள் அல்லது அதற்குக் குறைவாக சம்பளம் வாங்குவோருக்கு மட்டுமே இந்த சலுகைஅளிக்கப்பட்டு வந்தது. மேலும், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து நிறுவனம், தொழிலாளர்களின்பெற்றோர்களுக்கு தங்கும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு வந்தது.தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது.