நஷ்டத்தால் விரக்தி: வயலை எரித்த விவசாயி

Subscribe to Oneindia Tamil

வாதா (மகாராஷ்டிரா):விவசாயத்தில் பெரும் நஷ்டமானதாலும், பக்கத்து கிராமத்து விவசாயி இதே காரணத்திற்காக தற்கொலை செய்ததுமனதை பாதித்ததாலும், விரக்தி அடைந்த மகாராஷ்டிர மாநில விவசாயி ஒருவர் தனது 12 ஏக்கர் நெல்வயலையும் தீவைத்து கொளுத்தினார்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் வாதா அருகே உள்ள கெல்தான் கிராமம் பழங்குடியினர் அதிகம் வாழும்பகுதியாகும்.

கெல்தான் கிராமத்திற்கு அருகே உள்ள வாவேகர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாம்தியோ சங்கர் தாக்கரே. 48வயதாகும் இவர் விவசாயம் செய்வதற்காக வங்கியில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் விவசாயத்தில் ஏற்பட்டநஷ்டத்தால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இதனால் பெரும் மன வருத்தம் அடைந்தார் சங்கர் தாக்கரே. இந்த நிலையில், கடனைத் திருப்பிச் சொல்லி இந்தஅதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதால் சங்கர் மிகவும் வேதனை அடைந்தார். இதைத் தொடர்ந்து தனது வீட்டில்தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறிந்த கெல்தான் கிராமத்தைச் சேர்ந்த நாராயன் பேடு பாட்டீல் என்ற விவசாயி கடும் விரக்தி அடைந்தார்.இவரும் கடன் வாங்கித்தான் தனது 12 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். இவராலும் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாத நிலை இருந்தது.

தாக்கரேவின் மரணத்தால் விரக்தியுற்ற பாட்டீல் தனது வயலை தீவைத்துக் கொளுத்தப் போவதாக அறிவித்தார்.இதை அறிந்ததும் தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தியாளர்கள், பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் விரைந்துவந்தனர். அவர்கள் புடை சூழ தனது வயலுக்குத் தீவைத்தார் பாட்டீல்.

இந்த செயல் குறித்து பாட்டீல் கூறுகையில், பல கூட்டுறவு வங்கிகளிடம் கடன் வாங்கித்தான் ான் விவசாயப்பணிகளை தொடங்கினேன். ஆனால் தொடர் மழையால் நான் பயிரிட்டிருந்த நெற் பயிர்களில் பாதியளவுக்குமழையில் வீணாகி விட்டது. மீதள்ள பயிராலும் எனக்கு லாபம் கிடைக்காது.

இந்த நிலையில்தான் தாக்கரேவின் மரணம் என்னைப் பாதித்தது. அதனால்தான் அதிருப்தி அடைந்து எனதுவயலைக் கொளுத்தி விட்டேன்.

முதலில் பூச்சி வந்து எனது பயிர்களைப் பாதித்தது. பிறகு மழை வந்து நாசம் செய்தது. இப்படி இருந்தால்எங்களால் எப்படி கடன் தொகையை திருப்பித் தர முடியும்?

பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. ஆனால் அத்திட்டத்தை அதிகாரிகள் முறையாகசெயல்படுத்துவதில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளைக் காக்கஅரசும், அதிகாரிகளும் முன்வருவதில்லை என்று கண்ணீர் மல்கக் கூறினார் பாட்டீல்.

இந்த இரு சம்பவங்களும் மகாராஷ்டிராவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+