மலை மீது கூடாரம்: மர்ம கும்பல் கைது!
மேட்டூர்:சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மலை மீது கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த 10 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
மேட்டூர் அருகே பாலமலை என்ற மலை உள்ளது. இங்கு நேற்று மலை உச்சியில் சிலர் கூடாரம் அமைத்துத்தங்கியிருந்ததை வனத்துறையினர் கண்டனர்.
இதனால் அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அதிரடிப்படையினர்வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் நேற்று மாலை மலையில் ஏற ஆரம்பித்தனர். ஆனால் கன மழை காரணமாக மலை ஏறுவதுதடைபட்டது. இதையடுத்து இன்று காலை மீண்டும் மலை ஏறும் முயற்சி தொடங்கியது.
மலை உச்சியை அடைந்ததும் கூடாரத்தை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் உள்ளே இருந்தவர்களைவெளியே வர உத்தரவிட்டனர்.இதையடுத்து கூடாரத்திற்குள் இருந்த 10 பேர் வெளியே வந்தனர். அவர்களிடம் அதிரடிப்படையினர் விசாரணைநடத்தியபோது, அனைவரும் அருகே உள்ள நத்தக்காடு என்ற மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.
மலை மீது விளையும் மர வள்ளிக் கிழங்கை எடுத்துக் கொண்டு போக அவர்கள் வந்து கூடாரமிட்டுத்தங்கியிருந்ததும் தெரிய வந்தது.
இந்தக் கிழங்கை அடிவாரத்திற்குக் கொண்டு போய் கிலோ கிழங்கு 10 ரூபாய்க்கு விற்கவும் அவர்கள்திட்டமிட்டிருந்தனர்.
வனத்துறைக்குச் சொந்தமான இடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications