கேரளாவுக்கு எதிராக நெடுமாறன் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் கேரள அரசுக்கு எதிராகடிசம்பர் 4ம் தேதி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன்கூறியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 9 மாத காலமாகிறது.அந்த உத்தரவை நிறைவேற்ற தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கேரள முதல்வர் அச்சுதானந்தன்தீர்ப்பை நிறைவேற்றவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்பை நிறைவேற்றக் கோரி கேரள அரசுக்கு எதிராக பொருளாதார தடை மறியில் போராட்டம்நடத்த உள்ளோம். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி, கோழி உணவு பொருள், காய்கறிகள், பால் மற்றும்பல்வேறு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதை வரும் டிசம்பர் 4ம் தேதி தடுத்து ஒருநாள்அடையாள மறியல் போராட்டம் நடத்தப்படும்.

இதுகுறித்து ஏற்கனவே பாமக, விடுதலை சிறுத்தைகள் இயக்கம், மதிமுக போன்ற பல்வேறு கட்சிகள் போராட்டம்நடத்தபோவதாக அறிவித்துள்ளன. டெல்லியில் 23ம் தேதி நடக்கவுள்ள பேச்சு வார்த்தையில் தமிழக முதல்வர்எங்களது போராட்த்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேரள முதல்வரிடம் தமிழக மக்களின்கொந்தளிப்பை வெளிப்படுத்தி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாததை எதிர்த்து இருமாநில முதல்வர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்புவழக்கு தொடரப்படும்.

இலங்கை அதிபர் ராஜபக்சே 26ம் தேதி இந்தியா வருவதையொட்டி அன்றைய தினம் கறுப்பு தினமாககடைப்பிடிக்கப்படும் என அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+