இலங்கைக்கு ஆயுதங்கள் கிடையாது: மன்மோகன்
சென்னை:தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையிலான தாக்குதல் ஆயுதங்களை இலங்கைக்கு இந்தியா வழங்காதுஎன்று பிரதமர் மன்மோகன் சிங், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் பிரதமருக்கு வைகோ கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடாது, யாழ்ப்பாணம் செல்லும் ஏ9 சாலையை திறக்க வேண்டும், ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்களைவழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார்.
இக்கடிதத்திற்கு பிரதமர் பதில் அனுப்பியுள்ளார். அதில் மன்மோகன் சிங் கூறியுள்ளதாவது:
சமீபத்தில் இலங்கையில் நடந்த சம்பவங்களில் தமிழர் பகுதிகளில் பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்தது நம்அனைவருக்கும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற வன்முறைகளில் நியாயம் இல்லை. இதை நாம் தொடர்ந்துசொல்லி வருகிறோம்.
அப்பாவிகளைக் கொல்வது, குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையும் கொல்வது ஏற்கத்தக்கதல்ல.இதுகுறித்து இலங்கை அரசிடம் இந்தியாவின் கவலையைத் தெரிவித்துள்ளோம்.
அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு வழி வகுக்கும் முறைகளைக் கையாளாமல், தமிழர்களுக்கு நியாயமானஉரிமைகள் கிடைப்பதற்காக பேச்சுவார்த்தை மூலம் அரசியல் ரீதியாகத் தீர்வு காண வேண்டும் என இலங்கைஅரசிடம் இந்தியா வலியுறுத்தும்.
யாழ் சாலை மூடப்பட்டதால் அங்குள்ள தமிழர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படுவது குறித்து நீங்கள்தெரிவித்துள்ள கவலையில் நானும் பங்கு கொள்கிறேன். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில்வாழும் மக்களுக்காக அரிசி, பால் பவுடர், சர்க்கரை ஆகியவற்றை மனிதாபிமான அடிப்படையில் இந்தியாஅனுப்புகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகையிலான ராணுவத் தளவாடங்களை இந்தியா தருவதில்லைஎன்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. இலங்கையின் குடிமக்களான தமிழர்களின் உரிமைகளை மதிக்கவேண்டும் என்று இலங்கை அரசிடம் ஒவ்வொரு முறையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இந்தக் கருத்தை மீண்டும் இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளோம். அப்பாவி மக்களுக்கு ஆபத்து ஏற்படாதவகையில், தூதரக நடவடிக்கை மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ நாங்கள் முயற்சிப்போம் என்றுதெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications