For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்புமணி, நடிகர் விவேக் கண்தானம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விவேக் ஆகியோர் தங்களது கண்களை தானம் செய்வதாகஅறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் உலக கண்தான தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ்தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அன்புமணி பேசுகையில், கண்தானம் குறித்த விழிப்புணர்வை இந்தியாவில் அதிகரிக்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு லட்சம் கண்கள் இந்தியாவில் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ 23,000 கண்கள்தான்.

அனைவரும் கண் தானம் செய்ய முன்வந்தால் இந்த நிலை மாறும். எதிர்கால கண் தானத் திட்டத்தை கருதி எனதுவாழ்நாளுக்குப் பிறகு நானும் எனது கண்களைத் தானம் செய்கிறேன் என இந்த நிகழ்ச்சியின் மூலம்அறிவிக்கிறேன். என்னைப் பார்த்து இளைய சமுதாயத்தினர் பெருமளவில கண் தானம் செய்ய முன்வரவேண்டும்.

இந்தியாவில் 45 லட்சம் பேருக்கு கடந்த ஆண்டு கண் புரை அறுவைச் சிகிச்சை செய்ய இலக்குநிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 49 லட்சம் பேருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 லட்சம்பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 6 லட்சம் பேருக்கு செய்யப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் 2020ம் ஆண்டுக்குள் கண் பார்வை இல்லாதவர்களே இல்லை என்ற இலக்கைநிர்ணயித்துள்ளது. இதை இந்தியா நிச்சயம் அடையும் என்றார் அன்புமணி.

இதேபோல நடிகர் விவேக்கும் தனது பிறந்தநாளையொட்டி நேற்று கண்தானம் செய்தார். சாலிகிராமத்தில் உள்ளதனது அலுவலகத்திற்கு வந்த விவேக் அங்கு ரசிகர் மன்றத்தினர், திரையுலகினரின் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு கண் தானம் செய்வது தொடர்பான விருப்பப்படிவத்தை நிரப்பிக் கொடுத்து தனது கண்களை தானம் செய்வதாக தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X