பாக்யராஜ் திவால் என அறிவிக்க கோரி கேஸ்
சென்னை:இயக்குனர், நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோரை திவால்ஆனவர்கள் என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்பாலால் அன்ட் சன்ஸ் என்ற நிதி நிறுவனம் தாக்கல் செய்துள்ளமனுவில், பாக்யராஜும், அவரது மனைவி பூர்ணிமாவும் எங்களுக்கு ரூ. 84 ஆயிரம்கடன் பாக்கி வைத்துள்ளனர். பலமுறை அத்தொகையைக் கேட்டும் அவர்கள்தரவில்லை. இதுதொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
அந்த வழக்கில் கடன் பாக்கியை திருப்பித் தருமாறு கடந்த 2004ம் ஆண்டு நவம்பர்2ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படியும் பாக்யராஜும், பூர்ணிமாவும்அத்தொகையைத் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து இருவரையும் திவால் ஆனவர்கள் என அறிவிப்பது தொடர்பானநோட்டீஸை அனுப்புமாறு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அதன்படிஇருவருக்கும் உயர்நீதிமன்றம் திவால் நோட்டீஸ் அனுப்பியது.
அதில், நிாேட்டீஸ் கிடைத்த 35 நிாட்களுக்குள், இருவரும் பணத்தைத் திருப்பித்தந்திருக்க வேண்டும். அப்படியும் அவர்கள் தரவில்லை. எனவே இருவரையும் திவால்ஆனவர்கள் என உயர்நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். அதுவரை அவர்களதுசொத்துக்களை உயர்நீதிமன்றம் தன் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும் என்றுகோரியுள்ளனர்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போதுஇதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பாக்யராஜ், பூர்ணிமாவுக்கு நீதிபதி நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications