பொருளாதார மண்டலங்கள்-தமிழகம் ஹை ஸ்பீட்
சென்னை :தமிழகத்தில் அமைக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உலக வர்த்தகநிறுவனங்களை பெருமளவில் ஈர்த்து வருகின்றன. கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.2,750 கோடி அளவுக்கான முதலீடுகளை இந்த மண்டலங்கள் ஈர்த்துள்ளன.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (ஸ்பெஷல் எகனாமிர் சோன்ஸ்) அமைத்துமுதலீட்டையும் தொழிற்சாலைகள் நிறுவனங்களை ஈர்க்க நாடு முழுவதும்மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.
இந்த மண்டலங்களுக்குத் தேவையான நிலங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகபெரும்பாலான மாநிலங்களில் பெரிய அளவில் பஞ்சாயத்து நடந்து வருகிறது.எதிர்ப்புகள்,போராட்டங்கள் களை கட்டிக் கொண்டுள்ளன.
ஆனால் தமிழகத்திலோ நிலைமை தலைகீழாக உள்ளது. பாமக மட்டுமே முதலில்சத்தம் போட்டது. இப்போது அதுவும் அமைதியாகிவிட்டது.
இதனால் சத்தமே போடாமல் இங்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குதொழிற்சாலைகளும் வந்திறங்கி உற்பத்தியையும் தொடங்கி விட்டன. மேலும்முதலீடுகளும் குவிந்து வருகின்றன.
தமிழகத்திற்கு மொத்தம் 45 பொருளாதார மண்டலங்கள் அமைக்க அனுமதிவழங்கப்பட்டது.
இதில் 20 மண்டலங்கள் தகவல் தொழில்நுட்பத் துறைக்காக ஒதுக்கப்பட்டவை. 19சிறப்பு பொருளாதார மண்டலங்களில் குறிப்பிட்ட தொழிலை மட்டுமே மேற்கொள்ளமுடியும். 6 மண்டலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யஅனுமதி தரப்பட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலம்,ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ் சிறப்பு மண்டலம், மஹிந்திரா வேர்ல்டு சிட்டி, பள்ளிக்கரணைதகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவைசெயல்பாட்டுக்கு வந்து விட்டன.
இவற்றின் மூலம் 2006-07ம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் ரூ. 2,750கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களும்செயல்பாட்டுக்கு வந்தால் முதலீடுகள் மேலும் பன்மடங்காகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.