லாரி விபத்து: ஒரே கிராமத்தில் 12 பேர் பலி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மலைப் பாறையில் மோதி லாரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரேகிராமத்தைச் சேர்ந்த 12 பேர் இறந்தது தெரிய வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் 3 மாதங்களுக்கு முன்புமரணமடைந்தார். இதையடுத்து ஈமக் கிரியை காரியத்தில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் 100 பேர் லாரிமூலம் ஓகனேக்கல் சென்றனர்.
அங்கு காரியத்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அஞ்செட்டி அருகே கத்திரிப்பள்ளம் என்றமலைப் பாதையில பாறை மீது லாரி மோதியது. இதில் 20 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதில் அய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 12 பேர் என தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் அந்தக்கிராமமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் ஓலக் குரலாக காணப்படுகிறது. இறந்தவர்களின்உடல்களை வாங்கவும், காயமடைந்திருப்பவர்களைப் பார்க்கவும் கிராமத்தினர் ஓசூர், பெங்களூர்,தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி என அலைந்து திரிந்து கொண்டுள்ளனர்.
இறந்த 12 பேரில் துரைசாமி என்பவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் நான்கு பேர். துரைசாமி, அவரதுமகன் கண்ணன், கண்ணனின் மனைவி சரோஜா, அவர்களது மகன் அன்பு ஆகியோரே அவர்கள்.
தங்களது கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை பறிகொடுத்த சோகத்திலிருந்து அய்யூர் கிராம மக்கள் இன்னும்மீளவில்லை.