மதுரையில் ரூ. 4,500 கோடியில் ஐ.டி. நகரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:மதுரை விமான நிலையம் அருகே ரூ. 4,500 கோடி முதலீட்டில் மாபெரும் தகவல் தொழில்நுட்ப நகரம்அமையவுள்ளது.

ஆர்.ஆர். தொழில் குழுமம் இந்த தொழில்நுட்ப நகரை நிர்மாணிக்கவுள்ளது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் 7ஆண்டுகளுக்குள் இது கட்டி முடிக்கப்படும்.

இதுகுறித்து குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். ரவி கூறுகையில், ஐடி நிறுவனங்களுக்கான கட்டடங்கள் தவிர 25,000 அடுக்கு மாடிக் குடியிருப்புகள், 4 பிரமாண்ட வணிக வளாகங்கள், 2 மருத்துவமனைகள், 2ஹோட்டல்கள், திரையரங்குகளும் அமைக்கப்படும்.

இதுதவிர 2 விளையாட்டு கிளப்புகள், ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்காக சிறப்பு மருத்துவமையங்கள், நீர் சுத்திகரிப்பு மையங்களும் அமையவுள்ளன. இத் திட்டத்துக்காக முதல் கட்டமாக 200 ஏக்கர்நிலம் விரைவில் கையகப்படுத்தப்படும்.

சென்னை கிண்டி மற்றும் அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக 31 லட்சம் சதுர அடிப்பரப்பளவில் பிரமாண்ட கட்டடங்களை எங்கள் நிறுவனம் கட்டியுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+