முதல்வருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை:முதல்வர் கருணாநிதி, கோவை ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல் ஆகியோருக்கு அல்உம்மா அமைப்பின் பெயரால் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்றுதான் திருப்பூர் நகராட்சித் தலைவர் செல்வராஜுக்குஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் முதல்வர் கருணாநிதியை மனித வெடிகுண்டுமூலம் தீர்த்துக் கட்டப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முதல்வரைக் கொல்லப் போவதாக மிரட்டி மீண்டும் கடிதம்வந்துள்ளது. அத்தோடு கோவை ஆட்சியர் நீரஜ் மிட்டலையும் கொல்லப் போவதாகஅல் உம்மா அமைப்பின் பெயரால் மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள இரண்டு தபால் அட்டைகளில் அரசு வேலை மற்றும்காவல்துறையில் பணியில் சேருவதற்கான வயது வரம்பை 24லிருந்து 29 ஆகஉயர்த்தாவிட்டால், டிசம்பர் 6ம் தேதி இருவரையும் மனித வெடிகுண்டு மூலம்கொல்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து முதல்வருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம்வந்துள்ளதால் அவற்றை அனுப்பியவர்கள் யார் என்பதைக் கண்டறியும்நடவடிக்கையை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.