மாறன் சிலை: மன்மோகன்-சோனியா பங்கேற்பு
டெல்லி:நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலையை பிரதமர் மன்மோகன் சிங்இன்று திறந்து வைத்தார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் சிலை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை திறந்துவைக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத்தலைவர் பைரான் சிங் ஷெகாவத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, மாறன் மனைவிமல்லிகா மாறன், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு எம்.பிக்கள், தமிழக திமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
நேற்றைய எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவை சோனியா காந்தி புறக்கணித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications