கருணாநிதிக்கு ராமதாசின் 6 கோரிக்கைகள்
சென்னை:கோட்டை முதல் தாசில்தார் அலுவலகம் வரை தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என கோரிதமிழகம் முழுவதும் வரும் 18ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோரின் மதிப்பை பெற்ற தலைவராக முதல்வர் கருணாநிதி திகழ்கிறார்.இந்தியாவுக்கு வழிகாட்டும் முதுபெரும் தலைவராக கருணாநிதி இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதைபயன்படுத்தி முதல்வர் இந்திய அளவிலும், உலக அளவிலும் உள்ள 6 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
1. பிற்பட்டோர்களுக்கு ஒரே தவணையில் 27% இட ஓதுக்கீட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
2. தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
3. கல்வியை மாநில அரசு பட்டியலில் கொண்டு வர வழிகாட்ட வேண்டும்.
4. தமிழ் உள்பட 18 மாநில மொழிகளையும் மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டும்.
5. நதிகளை இணைக்க வேண்டும்.
6. ஈழத்தமிழர் பிரச்சினையில் நிரத்தர தீர்வு காண வேண்டும்.
மேலும் கோட்டை முதல் தாசில்தார் அலுவலகம் வரை தமிழை ஆட்சி மொழியாக அமல்படுத்த வேண்டும். இதைவலியுறுத்தி மாநிலம் முழுவதும் 18ம் தேதி தொடர் முழுக்க போராட்டம் நடத்தப்படும்.
நதிகளை இணைப்பதற்கு இனியும் காலம் தாழத்தினால் காலம் நம்மை மன்னிக்காது என்று முதல்வர்கள்மாநாட்டில் முதல்வர் கருணாநிதி கூறியதை வரவேற்கிறேன். 2003ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 2015ம்ஆண்டுக்குள் நதிகளை இணைக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் நதிகளை இணைப்பதற்கு ஒரு குழுஅமைக்கப்பட்டது. 2004 வாஜ்பாய் அரசு பதவிக் காலம் முடிந்தது. முதல்வர் கருணாநிதி முயற்சி எடுத்துநதிகளை இணைப்பு செயலாக்க குழுவை உயிர்ப்பிக்க வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி பேசுவதற்கும், பதவியில் இருப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதனால்முதல்வர் கருணாநிதியின் பதவிக்கு ஆபத்தும் இல்லை. கலைஞரின் 5 ஆண்டு கால ஆட்சி நீடிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications