பிற்பட்டோர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில்ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த இட ஒதுக்கீடுக்கு எதிராக டெல்லியிலும் சில வட மாநிலங்களிலும் முற்பட்டபிரிவைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு பாஜக உள்படசில கட்சிகள் ஆதரவு தந்தன.

இந் நிலையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஓட்டெடுப்பு நடந்தபோது எந்தக் கட்சியும்இந்த மசோதாவை எதிர்க்கவில்லை. இதனால் ஒருமனதாக இந்த மசோதாநிறைவேறியது.

அதே நேரத்தில் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மை நிறுவனங்களையும் சேர்க்கவேண்டும் என்று பாஜக தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அந்தக் கோரிக்கையைபாஜக தவிர்த்த பிற கட்சிகள் அனைத்தும் எதிர்த்தால் அந்த கோரிக்கை குரல்வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டது.

பின்னர் நடந்த விவாதத்தின் முடிவில் மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்பதிலளித்துப் பேசுகையில், சிறுபான்மை உயர் கல்வி நிறுவனங்களை இதில்சேர்க்காததால், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச்சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சத் தேவையில்லை என்றார்.

அரசு உதவி பெறாத பிற உயர் கல்வி நிறுவனங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டைஅமல்படுத்துவதற்கு வசதியாக புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய அரசுதயாராக உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+