இந்தியாவின் நட்பு முக்கியமானது: அமெரிக்கா
வாஷிங்டன்:இந்தியாவும், அதன் நீண்ட நெடிய ஜனநாயக பாரம்பரியமும் அமெரிக்காவுக்குமிகவும் முக்கியமானது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனிஸ்னோ கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்திற்குஅமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் ஒப்புதல் அளித்து விட்டன.இதையடுத்து திங்கள்கிழமை இதுதொடர்பான சட்டத்தில் அதிபர் ஜார்ஜ் புஷ்கையெழுத்திடவுள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு அமெரிக்காவிதித்த தடை முடிவுக்கு வருகிறது. இனிமேல், அமெரிக்காவிடமிருந்து அணுசக்திக்கான எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப உதவி இந்தியாவுக்குத் தாராளமாககிடைக்கும்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வு குறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் டோனி ஸ்னோ கூறுகையில், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும்மிகவும் முக்கியமானது. நீண்ட நெடிய ஜனநாயகப் பாரம்ப>யத்தைக் கொண்டஇந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொள்ள அமெரிக்காவிரும்புகிறது.
இந்தியா ஒரு மிக முக்கியமான சக்தி என்பதை மட்டும் இந்த ஒப்பந்தம்பிரதிபலிக்கவில்லை. மாறாக அமெரிக்காவின் மிக நெருங்கிய தோழமை நாடாகவும்இந்தியா உருவெடுத்துள்ளது இது சுட்டிக் காட்டுகிறது.
இந்தியப் பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகநாடாகவும் இந்தியா திகழ்கிறது. பல்வேறு மதங்கள், கலாச்சார குழுக்கள், இனங்களைஒருங்கிணைக்கும் அற்புதமான ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது.
எனவே இப்படிப்பட்ட பாரம்பரியப் பின்னணியுடன் கூடிய இந்தியாவுடன் நெருங்கியஉறவுகளை வளர்த்துக் கொள்வதில் அமெரிக்கா ஆர்வமுடன் உள்ளது என்றுஇந்தியாவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் ஸ்னோ.