நீதிபதிகள் நீக்கம்: போலீஸ் மீது வைகோ புகார்
சென்னை:நெல்லை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி நாகநாதன் மற்றும் நீதித்துறை நடுவர் நாகராஜன் ஆகியோரைசஸ்பெண்ட் செய்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், போலீஸாரின் தவறான அறிக்கை மூலம் இருநீதிபதிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர் சமுதாயம்கோபமடைந்து போராட்டத்தில் குதித்துள்ளது.
இந்த சம்பவம் மூலம் நீதித்துறையில் காவல்துறையால் குறுக்கீடு செய்ய முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.நீதித்துறையினரை மிரட்டிப் பணிய வைக்க முடியும் என்பதை போலீஸார் நிரூபித்துள்ளனர். இது நீதித்துறைநிர்வாகத்திற்கு கேடு விளைவிப்பதாக அமையும்.
நீதிபதிகள் மீது தவறான,பொய் புகார்களை கொடுத்த போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருநீதிபதிகளையும் மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications