For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னாள் எஸ்.பியை அடித்த பாமக மா.செ.

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:பெட்ரோல் போட வந்த இடத்தில் முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளரைதாக்கியதாக காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலாளர் மீது போலீஸில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலாளராக இருப்பவர் குமாரசாமி. இவர்காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு பெட்ரோல் போட வந்துள்ளார்.அவரது கார் அங்கு வந்தபோது ஏற்கனவே பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தஓய்வு பெற்ற காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெகதீசனின் கார் நின்றுகொண்டிருந்தது.

ஜெகதீசனின் கார் மீது மோதுவது போல குமாரசாமியின் கார் நிறுத்தப்பட்டது.இதுகுறித்து ஜெகதீசன் கேட்டபோது குடிபோதையில் இருந்த குமாரசாமி, ஜெகதீசனைஓங்கி அறைந்துள்ளார். தொடர்ந்து தாக்க அவர் முயல்வதற்குள் அருகில்இருந்தவர்கள் குமாரசாமியை தடுத்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அடி வாங்கியதால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் இதுகுறித்து போலீஸில் புகார்கொடுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X