அமைச்சர் வேலு முன்பு கொந்தளித்த கர்நாடக எம்.பி

Subscribe to Oneindia Tamil

ஹூப்ளி;ரயில்வே விழாவுக்கு தனக்கு உரிய முறையில் அழைப்பு அனுப்பப்படாததைக் கண்டித்து மத்திய ரயில்வே இணைஅமைச்சர் ஆர்.வேலு முன்பு கர்நாடக மாநிலம் தார்வாட் தெற்கு எம்.பி ஆவேசமாக பேசியதால் பரபரப்புஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் அமைச்சர் வேலு கலந்து கொண்டார். அப்போதுஅங்கு தார்வாட் தெற்கு எம்.பி. மஞ்சுநாத் குன்னூர் வந்தார். விழாவுக்கு தான் முறையாக அழைக்கப்படவில்லை.ரயில்வே அதிகாரிகள் தன்னை மதிக்கவில்லை என்று கோபமாக அவர் பேசினார்.

அமைச்சர் வேலு முன்பு அவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. குன்னூரை சமாதானப்படுத்தியவேலு, தயவு செய்து மேடைக்கு வாருங்கள் என்று அழைத்தார். ஆனால் வேலுவுக்கு அருகே நின்றிருந்த தென்மேற்கு ரயில்வே கோட்ட அதிகாரிகள் எம்.பியைக் கண்டுகொண்டது போலத் தெரியவில்லை.

இதனால் மேலும் கோபமடைந்த குன்னூர் என்னை அதிகாரிகள் மதிக்கவில்லை. எனவே நான் வெளிநடப்புச்செய்கிறேன் என்று கூறி விட்டு வெளியேறினார்.

பின்னர் வெளியே வந்த அவர் இந்த அவமரியாதை குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி,ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு புகார் தெரிவிக்கப் போவதாக குன்னூர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+