For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொய் பேசும் வைகோ- குட்டை உடைத்த காங்!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:மதிமுக உள்கட்சி பிரச்சனையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியும் முதல்வர் கருணாநிதியை எச்சரித்ததாக வைகோ கூறியுள்ளதுதவறான தகவல், கண்டனத்துக்குரிய பேச்சு என காங்கிரஸ் கட்சிதெளிவுபடுத்தியுள்ளது.

முதல்வர் கருணாநிதி மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாகவும், பணத்தை வாரிஇறைத்து அதிருப்தியாளர்களைத் தூண்டி விடுவதாகவும், மதிமுக தலைமைக் கழகஅலுவலகமான தாயகத்தைக் கைப்பற்ற குண்டர்களை ஏவி விடுவதாகவும் கூறிபிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்குவைகோ கடிதம் எழுதினார்.

பின்னர் தனது கட்சியையும், கட்சி அலுவலகத்தையும், சோனியா காந்திதான்காப்பாற்றினார் என்று வைகோ அளித்த பேட்டியில் தெ>வித்திருந்தார். மேலும்அப்பேட்டியில், ஒரு அரசியல் கட்சியை உடைப்பதும், அதன் அலுவலகத்தைகைப்பற்ற முயற்சிப்பதும் பொறுத்தக் கொள்ள முடியாதது, நாகரீகமற்ற செயல் எனகருணாநிதியை சோனியாவும் பிரதமரும் எச்சரித்ததாகவும் வைகோ கூறியிருந்தார்.

மதிமுக தலைமை அலுவலகத்தையும் தனது உயிரையும் சோனியா காந்தி தான்காப்பாற்றினார் என்றும் வைகோ கூறியிருந்தார்.

இந் நிலையில் நேற்று பிரதமரையும் நேரில் சந்தித்துப் பேசினார் வைகோ. இதைத்தொடர்ந்து திமுக மத்திய அமைச்சர் பாலுவும் பிரதமரைச் சந்தித்து வைகோ மீது புகார்கூறியதோடு, இந்த விவகாரத்தில் சோனியா-பிரதமரின் பெயர்களை வைகோபயன்படுத்தி திமுகவின் பெயரைக் கெடுக்க முயல்வதாக குற்றம் சாட்டினார்.

மேலும் முதல்வர் கருணாநிதியின் கோபத்தையும் பாலு அப்போது பிரதமரிடம்தெரியப்படுத்தியதோடு வைகோவின் பேட்டி குறித்து கருத்தும் கேட்டார்.இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் வீரப்ப மொய்லி பாலுவுடன்பேசினார்.

மேலும் கருணாநிதியுடனும் அவர் தொலைபேசியில் பேசியதாகத் தெரிகிறது.

இதையடுத்து மொய்லி வெளியிட்ட அறிக்கையில், வைகோவுக்கு காங்கிரஸ் கட்சி கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தான் கூட்டணியின் மிக முக்கிய தலைவர். அவரைஒதுக்கிவிட்டு எந்தக் காரியத்தையும் காங்கிரஸ் செய்யாது. கருணாநிதி தலைமையில்கூட்டணி வலுவாக உள்ளது.

வைகோ கூறுவதைப் போல பிரதமரும், சோனியா காந்தியும் எந்தக் கருத்தையும்தெரிவிக்கவில்லை. வைகோ கூறியது தவறானது, உண்மையற்றது,கண்டனத்துக்குரியது. இதுபோல பேசி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி விடமுடியாது. இந்தக் கூட்டணி வலுவாக, உறுதியாக, குழப்பம் இல்லாமல் உள்ளது என்றுகூறியுள்ளார்.

இதன்மூலம் வைகோவை காங்கிரஸ் மூக்கறுத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X