ஹஜ்: இதுவரை 111 இந்தியர்கள் மரணம்
ஸ்ரீநகர்:ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள இந்தியர்களில் இதுவரை 111 பேர் இயற்கையானமுறையில் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரை தற்போது நடந்துவருகிறது. இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களில் 111 பேர் இயற்கையான முறையில் இறந்துள்ளனர். அவர்களில்பெரும்பாலானவர்கள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர். உத்திரப் பிரதேசம்மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.இரு மாநிலங்களிலும் தலா 24 பேர் இறந்துள்ளனர்.
கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் 11 பேரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 8 பேரும்,ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் 7 பேரும் இறந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களில் 5 பேர் இறந்துள்ளனர். இவர்களில்மாநில முதல்வர் குலாம் நபி ஆசாத்தின் சகோதரும் ஒருவர். குஜராத், பீகார்மாநிலத்தவர்கள் தலா 3 பேரும், உத்தராஞ்சலிலிருந்து 2 பேரும், மேற்கு வங்கம்,மணிப்பூர், அஸ்ஸாம், புதுச்சேரி, மத்திய பிரதேசம், டெல்லி ஆகியமாநிலங்களிலிருந்து தலா ஒரு யாத்ரீகரும் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதிலிருந்து 20 லட்சம் முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications