தமிழகத்தில் 200 ஒட்டகங்கள் குர்பானி!
சென்னை:பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 200 ஒட்டகங்கள் வெட்டி குர்பானிகொடுக்கப்பட்டன.
உலகம் முழுவதும் நேற்று பக்ரீத் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் இஸ்லாமியமக்கள் பக்ரீத்தை சிறப்பாக கொண்டாடினர். சிறப்புத் தொழுகைகள் நடத்தி குர்பானிகொடுத்து பக்ரீத்தை தமிழக இஸ்லாமியர்கள் வழக்கமான உற்சாகத்துடன்கொண்டாடினர்.
குர்பானிக்காக இந்த முறை ஏராளமான ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.ஒட்டகங்கள் வெட்ட தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் நேற்று மொத்தம் 200ஒட்டகங்கள் வெட்டப்பட்டன.
தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் மட்டும் 160 ஒட்டகங்கள்வெட்டப்பட்டன. சென்னையில் மட்டும் 32 ஒட்டகங்கள் வெட்டிப் பலி தரப்பட்டன.
வெட்டப்படும் விலங்கின் இறைச்சியில் ஒரு பகுதியை உறவினர்களுக்கும், ஒருபகுதியை உறவினர் அல்லாத இஸ்லாமியர்களுக்கும், இன்னொரு பகுதியைஏழைகளுக்கும் தானமாக கொடுக்க வேண்டும்.
அதன்படி ஆடு, மாடு, ஒட்டக இறைச்சியை தானமாகக் கொடுத்து இஸ்லாமியர்கள்பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications