ஆனந்தராஜின் 2 கோடி சொத்து-கார் பறிமுதல்
சென்னை:போலி பிஷப் ஆனந்தராஜின் 2 கோடி சொத்துக்கள் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாமல்லப்புரத்தில் ஏழைகளுக்கு இலவச வீடுகட்டிதரும் திட்டம் மூலம் பல காண்டிராக்டர்களிடம் ரூ. 10 கோடிஅளவுக்கு பண மோசடி செய்த வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் மாமல்லபுரம் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார் ஆனந்தராஜ். இவர் மீது மாமல்லபுரம் மற்றும் ராமநாதபுரத்தில் மொத்தம் 12 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
முதலில் ராமநாதபுரம் போலீசார் ஆனந்தராஜை காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் இவர் மீதான வழக்குசெப்டம்பர் 1ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து டிசம்பர் 21ம்தேதி ஆனந்தராஜை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.
![]() |
14 நாள் விசாரணைக்குப்பின் இன்று ஆனந்தராஜ் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்தியசிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் ஆனந்தராஜ் தனது மோசடிகள் குறித்து ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளார். மோசடி செய்த பணத்தின் மூலம் வாங்கிய சொத்துக்கள் குறித்தும் அவர் தெரிவித்தார்.
அதன் பேரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலம், வீடுகள், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கார்கள், ரூ. 7 லட்சம் பணம், ரூ.49 லட்சம் வங்கி காசோலை, ரூ. 15 லட்சம் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஆகியவை உள்பட மொத்தம் ரூ. 2 கோடிமதிப்புள்ள சொத்துக்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றினர்.













Click it and Unblock the Notifications