தவறான சிகிச்சையால் பள்ளி மாணவி பலி
கோவை:கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்தால் பள்ளி மாணவி உயிரிழந்தார்.
கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் மணியன். இவரது மகள் கவிப்பிரியா (13). இவர் 9ம் வகுப்பு படித்துவந்தார். காய்ச்சல் வந்ததால், கவிப்பிரியாவை கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதித்தனர்.
அங்கு கவிப்பிரியாவுக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டு, ஊசி போடப்பட்டது. இதையடுத்து கவிப்பிரியா மயக்கம்அடைந்தார். அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் கவிப்பிரியாவுக்கு தூக்க ஊசி போடப்பட்டுள்ளது.வீட்டுக்கு கொண்டு சென்று தூங்க வையுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கவிப்பிரியாவை வீட்டுக்குக் கொண்டு சென்றனர். அங்கு நீண்ட நேரமாகியும் கவிப்பிரியாஎழுந்திருக்கவில்லை. மேலும் அவரது வாயிலிருந்து நுரை தள்ளியுள்ளது, உடலும் நீலம் பாரித்துள்ளது.
பயந்து போன அவரது பெற்றோர் இன்னொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குகவிப்பிரியாவை பரிசோதித்த டாக்டர்கள், கவிப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த மணியன் போலீஸில் புகார் கொடுத்தார். போலீசார் கவிப்பிரியாவின் உடலை பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அணுப்பி வைத்தனர்.
நேற்று காலை 11 மணியளவில் கவிப்பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.மருத்துவமனையில் திரண்ட அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் கபிப்பிரியாவின் உடலை வாங்கமறுத்து விட்டனர். கவிப்பிரியாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம். மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லமாட்டோம் எனக் கூறி மறியல் செய்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் வருவாய் கோட்டாட்சியர் தனியார்மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவார்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் டாக்டர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் கவிப்பிரியாவின் உடலை வாங்கி சென்றனர்.
குறைந்த நேரத்தில் அதிக அளவிலான குளுக்கோஸ் ஏற்றியதால்தான் கவிப்பிரியா இறந்து விட்டதாககூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications