மனைவியை துடுப்பால் அடித்துக் கொன்ற கணவன்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:ஈரோடு மாவட்டம் பவானி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரை படகில்அழைத்துச் சென்று நடு ஆற்றில் வைத்து துடுப்பால் அடித்துக் கொலை செய்தார். பிறந்து 6 மாதமே ஆனகுழந்தையையும் தாயின் பிணத்தோடு சேர்த்து கட்டி ஆற்றில் போட்டுக் கொலை செய்தார்.

அம்மாப்பேட்டை சின்னப்பள்ளம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவர் ஒரு மீனவர். இவரது மனைவிகுளோரியா மேரி. இவர்களுக்கு ஜெனீபர் நித்யா, கில்பர்ட் செல்வா, அருண் சேட், ஆண்டனி ஆகிய குழந்தைகள்உள்ளன. ஆண்டனி பிறந்து 6 மாதம்தான் ஆகிறது.

குளோரியா நடத்தை குறித்து சின்னப்பனுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையேஅடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சில நாட்களாக குளோரியாவையும், ஆண்டனியுயம் சிலநாட்களாக காணவில்லை. அவர்களைத் தேடி வந்தார் சின்னப்பன்.

இந்த நிலையில் நெஞ்சிப்பேட்டை அருகே காவரி ஆற்றில் பாறாங்கல் கட்டப்பட்ட நிலையில் குளோரியா மற்றும்குழந்தையின் பிணங்கள் கரை ஒதுங்கின.

இதுகுறித்து சின்னப்பனைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்தான்குளோரியாவையும், குழந்தையையும் கொன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சின்னப்பன் கூறுகையில், எனது மனைவிக்கு பலருடன் கள்ளக் காதல் இருந்தது. நான் கண்டித்தும்அவர் கேட்கவில்லை. இதனால் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டேன்.

புதன்கிழமை இரவு எனது பரிசலில் ஒரு பெரிய பாறாங்கல், மற்றும் கயிறு ஆகியவற்றை போட்டு விட்டுவீட்டுக்கு வந்தேன். அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு குளோரியாவை எழுப்பி மீன் பிடிக்கக் கூப்பிட்டேன்.

முதலில் வர மறுத்த அவர் பின்னர் ஆண்டனியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.கிளம்பும்போது என்னை எனது உறவினர் வீட்டில் விட்டு விடுங்கள் என்று கூறினாள். சரி என்று கூறிய நான்பரிசலில் அழைத்துச் சென்றேன்.

ஆற்றின் நடுவில் சென்றபோது துடுப்பால் ஓங்கி பலமாக அடித்தேன். இதில் நிலைகுலைந்த அவள் படகிலேயேமயங்கி விழுந்தாள். அப்போது குழந்தை ஆண்டனி தூங்கிக் கொண்டிருந்தான். அவன் யாருக்குப் பிறந்தானோஎன்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

இதையடுத்து எனது மனைவியின் சேலையோடு சேர்த்து தூங்கிக் கொண்டிருந்த ஆண்டனியைக் கட்டினேன்.பின்னர் அவர்களது உடலில் பாறாங்கல்லைக் கட்டி ஆற்றில் தூக்கிப் போட்டேன். பின்னர் வீடு திரும்பி விட்டேன்என்று தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார் சின்னப்பன்.

சின்னப்பனைக் கைது செய்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+