திடீரென கருணாநிதியை சந்தித்த ராமதாஸ்
சென்னை:நீண்ட நாட்களுக்குப் பின் முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே திமுக, பாமக இடையே உரசல் உருவானது. உள்ளாட்சித்தேர்தலின்போது அது வெடித்தது. அந்தத் தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்தும் பாமகவினரை திமுகவினரேதோற்கடித்ததாகவும் புகார்களை அடுக்கினார் ராமதாஸ்.
![]() |
இதையடுத்து அரசுக்கு நெருக்கடி தரும் நடவடிக்கைகளிலும் இறங்கினார். சிறப்பு பொருளாதார மண்டலங்கள்அமைப்பது, சென்னையின் துணை நகரத்தை அமைப்பது ஆகிய திட்டங்களை எதிர்த்த ராமதாஸ் அரசுக்குஎதிராக பாமகவினரை விட்டு போராட்டமும் நடத்தினார்
மேலும் அரசுக்கு 5 கோரிக்கைள், 3 கோரிக்கைகள் என பத்திரிக்கைகள் மூலம் கோரிக்கைகளை வைக்கஆரம்பித்தார். முதல்வர் கலந்து கொண்ட விழாக்களில் பங்கேற்றாலும் கருணாநிதியுடன் பேசாமலேயே கிளம்பிச்சென்றார்.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தரும் விஷயத்தில் மத்திய அரசைகருணாநிதி நெருக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் ராமதாஸ். சட்டசபையிலும் திமுகவைகு பாமககேள்விகளால் துளைத்தது.
இதனால் அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற ராமதாஸ் இப்போதே தயாராகி வருவதாக யூகம்எழுந்தது.
இந் நிலையில் திடீரென கோபாலபுரம் வந்த ராமதாஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்துவழங்கினார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்பி மூர்த்தியும் உடனிருந்தார்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
புத்தாண்டையொட்டி முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னேன். இது நல்ல சந்திப்பாக அமைந்தது. இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரிக்கை விடுத்தேன். இலங்கை தமிழர் நலன், முல்லைப் பெரியாறுகுறித்தும் பேசினேன்.
இனிமேல் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்துடன் பேச்சே கிடையாது என முதல்வர் என்னிடம்உறுதியளித்தார் என்றார் ராமதாஸ்.
வழக்கமாக ஆங்கில புத்தாண்டை ராமதாஸ் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந் நிலையில் அதை சாக்காகவைத்து கருணாநிதியை திடீரென அவர் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.













Click it and Unblock the Notifications