பொங்கல் முதல் இலவச கேஸ், ஸ்டவ்
சென்னை:வரும் பொங்கல் முதல் இலவச கேஸ் இணைப்பு, ஸ்டவ் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கிவைக்கிறார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
ஏழை எளிய தாய்மார்களுக்கு எரிவாயு அடுப்பு இலவசமாக வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில்அறிவிக்கப்பட்டதையொட்டி சுந்திர தின விழாவில் உறையாற்றிய முதல்வர் கருணாநிதி, விறகு மண்ணெண்னைஅடுப்புகளை பயன்படுத்தும் ஏழை தாய்மார்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பும் அடுப்பும்கிடைத்திட வகை செய்யப்படும் என கூறினார்.
இதையடுத்து பொங்கல் திருநாளையொட்டி இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் திட்டத்தை14ம் தேதி அன்று காலை 10 மணிக்கு ஆயிரம் விளக்கு, தமாஸ் சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில்முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியல் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, உள்ளாட்சி துறை அமைச்சர்மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், உணவுத்துறை அமைச்சர் வேலு, தலைமை செயலாளர்திரிபாதி, சென்னை மாநகர மேயர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள்ஏழை எளிய தாய்மார்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகளை வழங்குவார்கள்.
இத்திட்டத்தின் தொடக்க நாளன்று மாநிலம் முழுவதும் 34,500 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு அடுப்புகள்வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications