சிறுவர்களிடம் ரத்தம் உறிஞ்சிய கொடூரன் கைது!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு ஆசை காட்டி ரத்தம் எடுத்து கொள்ளை லாபம் சம்பாதித்த ரத்தவங்கியின் உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ரத்த தானம் செய்ய முடியும். அதற்கு கீழே உள்ளவர்களிடம் ரத்தம் எடுக்கக்கூடாது என்பது சட்டம். ஆனால் நாகர்கோவிலில் சொற்ப பணத்தைக் காட்டி பள்ளிச் சிறுவர்களிடம் ரத்தம்உறிஞ்சி கொள்ளை லாபம் சம்பாதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Blood bank owner Raja Isac

நாகர்கோவில் அருகுவிளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சேதுகணேஷ். 15 வயதாகும் இவர் வடசேரியில் உள்ளஅரசு உயர்நிலைப் பள்ளியில் 8வது வகுப்பு படித்து வருகிறார்.

இவரது தந்தை வீரமணி குடும்பத்தை விட்டுப் பி>ந்து சென்று விட்டார். இதனால் தாயார் லதா முறுக்கு வியாபாரம்செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

Genesh

சேதுகணேஷின் நண்பர் முகேஷ் குமார். இவருக்கும் 15 வயதுதான். ஒருமுறை செலவழிக்க கையில் பணம்இல்லாததால், வெட்டூரணிமடம் சாலையில் உள்ள ஒரு ரத்த வங்கிக்குச் சென்று ரத்தம் கொடுத்துள்ளனர்.அவர்களிடமிருந்து தலா 350 மில்லி ரத்ததத்தை எடுத்துக் கொண்டு அந்த ரத்த வங்கி உரிமையாளர் ஆளுக்கு ரூ.150 கொடுத்துள்ளார்.

இதையடுத்து இதே வழியில் அடிக்கடி பணம் சம்பாதிக்க முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து கையில் காசு இல்லாவிட்டால் இங்கு வந்து ரத்தம் கொடுத்து பணம் வாங்கிச் செல்லஆரம்பித்தனர். தங்களது நண்பர்களையும் இங்கே அழைத்து வந்து பணம் சம்பாதிக்கும் வழியைக் காட்டினர்.

இந்தப் பணத்தை வைத்து சினிமாவுக்குப் போவது, ஹோட்டலில் போய் சாப்பிடுவது என ஜாலியாக செலவுசெய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சேது கணேஷும், முத்துக்குமாரும் ரத்த வங்கிக்குச் சென்று வழக்கம் போலரத்தம்கொடுத்தனர். ரூ. 150 பணம் கிடைத்தது. ரத்தம் கொடுத்து விட்டு வெளியே வந்தபோது சேதுகணேஷ் திடீரெனமயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்தும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முகேஷ்குமாரிடம் விசாரித்துள்ளனர். அவர் ரத்த வங்கியில்ரத்தம் கொடுத்து விட்டு வருவதாக கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக வடசேரி காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்ததும் வடசேரி இன்ஸ்பெக்டர் சோனமுத்து தலைமையில் போலீஸார் விரைந்து வந்துசேதுகணேஷை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பந்தப்பட்ட ரத்த வங்கியில் விசாரணை நடத்தியபோது சிறுவர்களிடம் ரத்தத்தை உறிஞ்சி பல ஆயிரக்கணக்கில்விற்று கொள்ளை லாபம் சம்பாதித்த கொடுமை தெரிய வந்தது.

தலைமறைவான ரத்த வங்கி உரிமையாளர் ராஜா ஐசக்கை போலீஸார் தேடிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் நாகர்கோவில் பகுதியில் உள்ள பிற ரத்த வங்கிகளிலும் சிறுவர்களிடம் ரத்தம் எடுக்கப்பட்டதா என்றுசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சிறுவர்களிடம் சொற்ப பணத்தைக் கொடுத்து ரத்தத்தை உறிஞ்சிய கொடுமை நாகர்கோவிலில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+