கோவையில் துணை நகரம் இல்லை: தமிழக அரசு
கோவை:கோவை அருகே துணை நகரம் அமைக்கும் திட்டம் இல்லை. இதுதொடர்பாக விவசாய நிலங்களைகையகப்படுத்தும் எண்ண.ம் இல்லை என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும், மாவட்ட நிர்வாகமும்தெளிவுபடுத்தியுள்ளன.
கோவை அருகே உள்ள வெள்ளலூர், செட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் விவசாய நிலங்களைகையகப்படுத்தி அங்கு துணை நகரம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி கிளம்பியது.
இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கோவையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் ராஜாராம் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
அப்போது ராஜாராம் கூறுகையில், கோவை நகரிலோ அல்லது தமிழகத்தின் பிற பகுதிகளிலோ துணை நகரம்அமைக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை. விவசாய நிலங்களை கையகப்படுத்தப் போவதாக அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளது தவறானது என்றார்.
ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டல் கூறுகையில், கோவை நகரில் அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள வணிககட்டடங்களை இடிக்கும் பணியில் எந்த முறைகேடும் இல்லை. அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளகட்டடங்களை மட்டுமே இடித்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications