ஏப்ரல் முதல் மதுரையில் ஹெலிகாப்டர் சேவை
மதுரை:தமிழ் புத்தாண்டு முதல் மதுரையில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படுகிறது.
மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாதலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க வேண்டும் என்று பல காலமாககோரிக்கை இருந்து வருகிறது.
![]() |
கடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இந்த கோரிக்கையை வலியுறுத்திமதுரை எம்.பி மோகனும் பேசினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர்பிரபுல்படேல் மதுரையில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க மத்திய அரசு நடவடிக்கைஎடுக்கும் என கூறினார்.
இந்நிலையில், மதுரையில் ஹெலிகாப்டர் சேவையை தொடங்குவதற்கான ஆரம்பகட்டப்பணிகள் தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உதயசந்திரனை பிரபல ஹெலிகாப்டர் சேவைநிறுவனமான பவன் ஹான்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிள் மற்றும் மத்திய விமானநிலைய மேம்பாட்டு அதிகாரிகள் சந்தித்து பேசினர்.
மதுரையில் இருந்து தென்மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையைநடத்துவது குறித்து சாத்திய கூறுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.மதுரையில் இருந்து கொடைக்கானல், பழனி, தேக்கடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரிஆகிய இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவை தமிழ் புத்தாண்டான ஏப்ரம் 14ம் தேதி தொடங்கலாம் என்று தெரிகிறது.













Click it and Unblock the Notifications