பெரியார் சிலைக்கு குல்லா-தர்மபுரியில் பதட்டம்
தர்மபுரி:தர்மபுரியில் உள்ள பெரியார் சிலையின் தலையில் பிளாஸ்டிக் குல்லா போடப்பட்டு, கரும்புத் தோகைகட்டப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரியில் உள்ள பெரியார் மன்றம் அருகே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு சில விஷமிகள்பிளாஸ்டிக் குல்லாவை தலையில் போட்டிருந்தனர். மேலும் பெரியார் சிலையைச் சுற்றிலும் கரும்புத் தோகையால்தோரணம் போல கட்டியிருந்தனர். சிலை முன்பு பூவும் தூவப்பட்டிருந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் மன்றத்தினர், தி.க. தொண்டர்கள் அங்கு பெருமளவில்திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. சிலையை அவமதித்ததாக கருதப்பபடும் ஒரு நபரை அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபர் மன நிலை பாதித்தவர் போலத் தோன்றியதால்போலீஸார் அவரை விட்டு விட்டனர்.
பெரியார் தி.க. தலைவருக்கு குண்டாஸ்:
சென்னையில் அயோத்தியா மண்டபம் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் கைதானபெரியார் தி.க. மாவட்டத் தலைவர் தவசிகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தின் உள்ளே கடந்த மாதம் ஒரு கும்பல் பெட்ரோல்குண்டுகளை வீசி ரகளை செய்தது. மண்டபத்தின் நுழைவாயிலில் பூஜைப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தஒருவரும் கடுமையாகதாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரியார் தி.க.வைச் சேர்ந்த தென் சென்னை மாவட்டத் தலைவர் தவசிக்குமார்உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தவசிக்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போதுகைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல்துறை ஆணையர் லத்திகா சரண்பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications