கொள்ளையடித்து காதலியுடன் ஜாலி-இருவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றவும், உல்லாசம் அனுபவிக்கவும் போலீஸ் வேடத்தில்போய் கொள்ளை அடித்த நபரையும், அவரது கூட்டாளியையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை நகரில் போலீஸ் வேடத்தில் சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்து வாகனசோதனை என்ற பெயரில் பணம் பிடுங்குவதாகவும், நகை உள்ளிட்ட பொருட்களைபறிமுதல் செய்து செல்வதாகவும் போலீஸாருக்குப் புகார்கள் வந்தன.

Recovered jewels and robbers Seeivasan and Babu

இதையடுத்து இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை ஆணையர் லத்திகாசரண் உத்தரவிட்டார். கூடுதல் ஆணையர் ஜாங்கிட்டின் நேரடி மேற்பார்வையில்தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டது.

தனிப்படை போலீஸாரின் தீவிர வேட்டையில் இருவர் சிக்கினர். ஒருவர் ராயபுரத்தைச்சேர்ந்த சீனு என்கிற பர்மா சீனிவாசன். இன்னொருவர் பெயர் பாபு. இவர்வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர்.

Actress Helenஇவர்களிடமிருந்து 60 பவுன் நகைகள், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவர் மீதும் 19 வழக்குகள் நிலுவையில்உள்ளதும், 13 கைது வாரண்ட்டுகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

இருவரும் படு வித்தியாசமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இரவில்மட்டும்தான் இவர்கள் திருட்டு, கொள்ளையில் ஈடுபடுவார்கள். டிப்டாப்பாக போலீஸ்உடை அணிந்து கொண்டு ஒரு போலி போலீஸ் மோட்டார் சைக்கிளில் நின்றுகொள்வார்கள்.

அந்தப் பகுதியில் வரும் வாகனங்களை மடக்கி ஆர்.சி. புக் இருக்கிறதா, லைசன்ஸ்இருக்கிறதா என்று கேட்டு இல்லாதவர்களிடம் கைக் கடிகாரம், பணம், மோதிரம்உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொள்வார்கள்.

இதுபோல கடந்த ஒரு வருடமாக கொள்ளையடித்து வந்துள்ளனர். இருவரும்சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டு இந்த கொள்ளைத் தொழிலில்இறங்கியுள்ளனர்.

இதில் பாபுவின் தாயார் ஒரு விபச்சாரப் பெண்ணாம். சீனிவாசனுக்கும், பாபுவின்தாயாருக்கும் கள்ளத் தொடர்பும் இருந்துள்ளது. கொள்ளையடித்து வந்த பணத்தில்விபச்சாரிகளுடன் ஜாலியாக இருப்பாராம் சீனிவாசன்.

பாபுவுக்கு துணை நடிகையான ஹெலன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தஹெலன் ஆசைக்காதலன் என்ற படத்தில் நடித்துள்ளார். சினிமா நடிகை என்பதால்அவருக்காக செலவழிக்க நிறைய பணம் தேவைப்பட்டதால் இந்த வழிப்பறிக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் பாபு.

ஆகஸ்ட் 31ம் தேதி ஹெலனை வடபழனி முருகன் கோவிலில் வைத்துத் திருமணம்செய்து கொண்டார் பாபு. கொள்ளையடித்து தனக்கு பாபு செலவழிப்பது ஹெலனுக்குத்தெரியாதாம். பெரிய பணக்காரர் போல என நினைத்துக் கொண்டாராம்.

ஆனால் பாபு கொள்ளையன் என்று தெரிய வந்ததும் அவரை விட்டு ஹெலன் பிரிந்துபோய் விட்டார். தன்னை விட்டுப் பிரிந்து சென்ற ஹெலனை, தன்னோடு சேர்த்துவைக்க வேண்டும் எனக் கோரி வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்பாபு.

அவர் கொள்ளையன் என்று தெரியாமல் போலீஸாரும் மெனக்கெட்டு ஹெலனைஅழைத்து வந்து சேர்த்து வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் ஹெலன் மறுத்துவிட்டாராம்.

கைது செய்யப்பட்ட பாபு, சீனிவாசனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களைஆணையர் லத்திகா சரண் பார்வையிட்டார். இந்தக் கொள்ளைக் கும்பலைப் பிடித்ததனிப்படை போலீஸாருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

இந்தக் கும்பலிடம் மாட்டி செல்போன், பணத்தை இழந்ததில் பெரும்பாலானவர்கள்சாப்ட்வேர் என்ஜினியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+