மரத்திலான கப்பல் சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:மரத்திலான மிகப்பெரிய கப்பல் வரும் 31ம் தேதி சென்னை துறைமுகத்திற்கு வருகிறது.
இது குறித்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு டெல்லியில் நிருபர்களிடம்கூறியதாவது,
18ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட மரத்திலான மிகப்பெரிய கப்பல் 31ம் தேதி சென்னை துறைமுகத்துக்குவருகிறது. இது பிப்ரவரி 10ம் தேதி வரை சென்னை துறைமுகத்தில் இருக்கும் என்றார்.
முன்னதாக அவர், டெல்லி வந்துள்ள சுவீடன் நாட்டு வர்த்தக குழுவினரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில்சென்னையில் கடல்சார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்படும் திட்டம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.மேலும் இரு நாடுகளும், கப்பல் போக்குவரத்து துறையில் ஒத்துழைப்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications