சிறையில் அடைக்கப்பட்ட சித்துவுக்கு ஜாமீன்
டெல்லி:கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஜாமீன்வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாட்டியாலாவைச் சேர்ந்த குர்னாம் சிங் என்பவரைக் கொலை செய்த வழக்கில் சித்து உள்ளிட்டோருக்கு கடந்தமாதம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், சண்டிகர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சித்து சரணடைந்தார். அவரை 14 நாள் காவலில்வைக்க சண்டிகர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பாட்டியாலா சிறையில் சித்து அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சித்துதாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சித்து சார்பில் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சித்துவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. மேலும், அவரது மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, 17ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications