பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் சூட்கேஸில் பிணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:பெங்களூரிலிருந்து சென்னை வந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸில் மடித்து வைக்கப்பட்டநிலையில் வாலிபர் பிணம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூ>லிருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு 10.10 மணிக்கு பிருந்தாவன்எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பயணிகள் இறங்கிச் சென்றதும், ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனைமேற்கொண்டனர்.
![]() |
அப்போது, ஒரு பெரிய சூட்கேஸ் ஒன்றை பொதுப் பெட்டியில் பார்த்தனர். இதையடுத்து அதில் வெடிகுண்டுஏதேனும் இருக்கலாம் என சந்தேகமடைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனைநடத்தினர்.
அந்த சூட்கேஸில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரின் பிணம் மடித்து வைக்கப்பட்ட நிலையில் இருந்ததைப்பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
![]() |
கழுத்தை நெரித்து அந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். உடலை இரண்டாக மடித்து சூட்கேஸில்வைத்துள்ளனர் கொலைகாரர்கள். அந்த நபர் யார் தமிழகத்தைச் சேர்ந்தவரா அல்லது பெங்களூரைச் சேர்ந்தவராஎன்பது தெரியவில்லை.
பிரேதப் பரிசோதனைக்காக உடலை போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.














Click it and Unblock the Notifications